Tuesday, 4 December 2018

வணிகச் சமூகம்



ஒற்றை பாதையில்
வெகு தூரம் செல்கிறோம்
நிலவு ஒளியில்
வாழ்கை முழுவதும்
பயணங்களிலே தொடர்கிறது...


தம்மில் இன்பமும்
துன்பமும் அந்த
பாதையில் கழிகிறது
நம் இதை விதி என
நம்பினோம் எல்லாம்
தலைவிதி என்று.

ஒரு முட்டாள்தனமான
சிந்தனையில் சிக்கியது
வாழ்வு; பயணத்தின்
மாற்றுவழி அறியாமையால்
இந்த நிலை..


பகுத்தறிவை ஊட்டிய
மார்க்கத்தின் பிள்ளை;
விதி என்று நம்பி
வாழ்வை துளைத்தது
இந்த நெடு பயணத்தில்.

எந்த சுகமும் காணாது
கண்ணீருடன் இந்த
கூலி வேலை இழந்தால்
வேறு ஒன்றும் அறியாது
இந்த Gulf  விட்டு..
பிழைப்புக்கு என்று
நமது நினைப்பு!!!


கூடு விட்டு கூடு
மாறும்போது நீ
கொடுத்தவர்களும்
எதிர்பார்பார்கள்; நீ இன்னும்
கொடுக்க வேண்டும் என்று;
உன்னிடம் ஒன்றும்
இல்லாத போதும்;

வாழ்வும் புரியவில்லை
வாழ்த பின்னும்
மாற வில்லை ஏன்
இந்த நிலையோ!!

நாம் ஒரு வணிக
சமூகத்தின் வாரிசுகள்
என்று மறந்தது ஏனோ..


ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு
ஏற்றுமதி இறக்குமதி  வணிகம்
செய்த மிக நெடிய வரலாறு
முஸ்லிம் சமூகத்துக்கு
தமிழகத்தில் உண்டு.

பழவேற்காடு முதல்
சூரத் வரை இந்த
நீண்ட கடலும் கரை
நம் முன்னோர்கலிடம்
வாணிபத்தில் மிகுந்தது
பல நாடுகளுக்கு;


நமது கல்வின் வீழ்ச்சியும்
அரசியல் மாற்றத்தாலும்
கூலி களாக மாறினோம்
இவையை விதி யான
உன்னத உலமாக்கள்
நம்ப வைத்தனர்.


வாழ்வை புதுபிக்கா
தனது வரலாற்றை
அறியாததால்
இந்த நிலை...


தனி மனிதனுக்கு
எவ்வாறு நினைவாற்றல்
முக்கியமோ;  அது போல
தான் ஒரு சமூகத்திற்கு
அதன் வரலாறு முக்கியம்.

No comments:

Post a Comment