Tuesday, 4 December 2018

தேசியம்;



தேசியவாதம் மூலம்
மேற்கு உலகு மனிதகுலத்தை
பின்னோக்கி தள்ளியது;
இது மனிதனை மிருகமாக்கியது;

மரபுசார் நாகரிகத்தை
சீரழித்தது; சர்வாதிகாரமும்
போரும் இப் பூவுலகை
இடுகாடாக மாற்றியது.

தேசியம் மூலம் அவரது
நாட்டின் அன்பும் பிறர்
மீது வெறுப்பும் வளர்த்தெடுத்தது
இந்த நவீன தேசியம்;

இந்த தேசிய கொள்கையில்
வர்க்க ரீதியோ;
இன ரீதியோ; தேசிய
ரீதியோ; எந்த முழு
மனிதகுலத்திற்கும் நீதியும் ஒழுக்கமும் இல்லை;
ஒரு வெங்காயமும் இல்லை...

இவைகள் கீழ்த்திசை
தேசங்களில் சுதந்திரத்திற்காக
 திணிக்கப்பட்டது;

இது காலனித்துவத்தின்
அடுத்த பரிமாணம்
இந்த தேசியம்..

இது ஐரோப்பாவின் புதிய அடிமைகள்;

No comments:

Post a Comment