Saturday, 27 October 2018

கரும்பலகையில் எழுதாதவை;

கரும்பலகையில் எழுதாதவை;
- பழ.புகழேந்தி-

இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றும் வலிமையான கல்வி அரசியலை முன்வைக்கின்றன :-
தமிழில் பேசினால்
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி..

****
விடை சொல்லவே
பழக்குகிறோம்..
பழக்கியதே இல்லை
கேள்வி கேட்க...

*****
சார் ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்
அனுப்பினேன்.
சார் உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர.
உள்ளேயே ஈரம்.
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.
****

No comments:

Post a Comment